இடுகைகள்

படிக்க பிடிக்கும்

முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன் "கள்ளச்சிரிப்பு"என்றார்கள். கோபங் கொண்டேன் "சிடுமூஞ்சி"என்றார்கள். அதிகம் பேசாமலிருந்தேன். "ஊமையன்"என்றார்கள். சளசளவென்று பேசினேன்...!! " ஓட்டவாய்" என்றார்கள். புதிய தகவல்களை பரிமாறினேன். " கருத்து கந்தசாமி"என்றார்கள். அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்ந்தேன். " ஜால்ரா"என்றார்கள். எல்லா செயல்களிலும் முன் நின்று செய்தேன்....!! " முந்திரிக் கொட்டை"என்றார்கள். அவர்களைப் பின் தொடர்ந்தேன். "நடிப்பு" என்றார்கள். யாரைப் பார்த்தாலும் வணங்கினேன் " ஏமாற்றுக்காரன்" என்றார்கள். வணங்குவதை நிறுத்தினேன். "தலைக்கனம்" என்றார்கள். ஆலோசனை வழங்கினேன். "படித்த திமிர்" என்றார்கள். சுயமாக முடிவெடித்தேன். " அதிபுத்திசாலி"என்றார்கள். நான் கண்ணீர் விட்டு அழுததால். " வேஷக்காரன்"என்றார்கள். நான் சிரித்த போதெல்லாம் " மறை கழண்டுப் போச்சு"என்றார்கள். எதிர் கேள்வி கேட்டால். "வில்லங்கம்" என்றார்கள். ஒதுங்கி இருந்தால். " பயந்தாங்கொள்

ஜகாத் வழங்கும் முறை

 *ஜக்காத் வழங்கும் முறை* 🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂 சவுதியில் .. ஒரு முதலாளிக்கு ஒரு ஆட்டு பண்ணை உண்டு ..  300 ஆடுகள் இருக்கும் . வருடம் ஒரு முறை ..அல்லது இருமுறை அந்த ஆடுகளில் 20 பெண் ஆட்டை பிடித்து வண்டியில் ஏற்ற சொல்வார் . *அதை அப்படியே ஒரு ஏழையின் வீட்டில் இறக்கிவிடுவார் ..* நானும் கூடவே செல்வேன் . ஏன் ஒரே வீட்டிற்கு 20 ஆட்டையும் கொடுக்கின்றீர்கள்? அதை 20 பேருக்கு பிரித்து கொடுக்கலாமே.? 20 குடும்பம் உன்னை வாழ்த்துமே ! என்று சொன்னேன். அல்லது அவர்கள் உங்களின் இரத்த உறவுகளா?  மொத்தத்தையும் ஒரே வீட்டில் கொடுக்கின்றீர்களே என கேட்டேன் . என் முதலாளி சொன்னார் ..*நீ சொல்வது போல 20 பேருக்கு பிரித்து கொடுக்கலாம் ..  அப்படி பிரித்துக் கொடுக்கும்போது ஒரு ஆட்டை வைத்து அவர்கள் என்ன செய்வார்கள் ?.. நாளை யாரிடமாவது விற்றுவிட்டு அடுத்த 2 நாளில் செலவு செய்து விடுவார்கள்.* *பிறகு நம்மையும் மறந்து விடுவார்கள்*. *நம்முடைய நன்மையின் அளவும் அதோடு முடிந்து விடும்.* *அவர்களின் வறுமையும் ஒருபோதும் ஒழியாது* ஆனால் நாம் ஒரு ஏழையின் வீட்டில் கொடுத்து சென்றோம் என்றால்... அந்த வீட்டில் அடுத்த சில வருடத்தில் வந்த

கடைசி வரை தனி மனிதன்

 https://chat.whatsapp.com/CylA1y9m1rXDjOTU3CYsL4 ஐந்து வயதில் ஆசானாகவும், 20 வயதில் வில்லனாகவும், காட்சி தரும் அப்பா கடைசிவரை தனி மனிதன்தான். •அப்பா கடைசி வரை தனி மனிதன்தான். மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. 'பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய், ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார். இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது. இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும், என்று எண்ணிக் கொண்டான். நேர்காணலுக்கு கிளம்பினான்.... கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்" தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா. நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன். கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இ

ஐஸ் தண்ணீர் ஆபத்தை விளைவிக்கும்

ஐஸ் தண்ணீர் உஷார் ஆளையே கொல்லும்... அவதானம்... வெயில் உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. வெய்யில் கொடூரம்... தவறான முடிவெடுக்கத் தூண்டும்.... ஆம்... வெயிலில் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்ததும்... வெப்பக் கொடுமையால்.. ஐஸ் தண்ணீரை குடித்து விடாதீர்கள். 40 டிகிரி செல்சியஸ் அல்லது  105 டிகிரி அனல் காற்று வீசும் என்றும் பகலில் பயணம் செய்யாதீர்கள் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது. இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயில் இயல்பாகவே நமக்கு ஐஸ் தண்ணீர் மீது விருப்பத்தை தூண்டும். உடனே பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்து மடக் மடக்கென்று குடிப்போம். அப்படி குடித்தால் நமது உடலின் சிறிய ரத்தக்குழாய்கள் வெடித்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு மருத்துவர் தனது நண்பர் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்குள் வந்து குளிர்ந்த நீரால் பாதத்தை கழுவியிருக்கிறார். உடனே, அவருடை பார்வை மங்கி கீழே விழுந்திருக்கிறார். அவர் பயந்து நடுங்கியிருக்கிறார். வெயில் 100 டிகிரி அடித்தாலும், நமது உடல் அதைக்காட்டிலும் அதிக உஷ்ணமாகும். ஐஸ் தண்ணீர் குடிப்பது மட்டுமே ஆபத்து அல்ல. ஐஸ் தண்ணீரில்  கைகளையோ, மு

மறதி என்பது வியாதி அல்ல

மறதி..🌹 எனக்கு வயது 70 ஆகிறது. ஸ்டேட்  பேங்கில் பணி செய்து ஓய்வு பெற்றவன். பலர் ஓய்வு பெற்ற பின்னும் பணி செய்கிறார்கள்.  போதும் என்று தோன்றியது. குழந்தைகள் கல்யாணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார்கள். பாங்கில் இருக்கும் பணம் எனக்கும் என் மனைவிக்கும் இன்னும் இருபது வருடங்களுக்கு மேல் உதவும்.     வயோதிகத்தின் கோளாறால் வரும் சில தொல்லைகளில் ஒன்று மறதி. எழுத்தாளர் சுஜாதா எழுதி இருந்தது போல் அடுத்த அறைக்குச் சென்ற பின் எதற்கு வந்தோம் என்று யோசிப்பேன். வெகு நேரம் நினைவிற்கு வராது. வாழ்க்கையை அப்படியே எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு உண்டு. ஆனால் இந்த மறதியினால் நான் படும் கஷ்டம் கொஞ்சம் அதிகம் தான்.     மனைவி காய்கறி வாங்க லிஸ்ட் கொடுத்து அனுப்புவாள். கருவேப்பிலை கொத்தமல்லி கடைசியில் வாங்கலாம் என்று முடிவு செய்து கடைசியில் வாங்காமலே வந்து நிற்பேன். மனைவியிடம் திட்டு வாங்கி கட்டிக் கொள்வேன். சமாளிக்க “எல்லாம் நன்மைக்கே” என்று சொல்லுவேன்.  “எது, கருவேப்பிலை கொத்தமல்லி வாங்கி வராமல் இருப்பது நல்லதா?” என்று கேட்டு முறைப்பாள் என் மனைவி.      " அதற்கு என்ன, சாயந்திரம் வாக்கிங் போய் வரும் பொழு

ஸ்பீட் பைக் ஓடும் அன்பு தம்பிக்கு

■ ஸ்பீட் பைக் ஓடும் அன்பு தம்பிக்கு▪︎ ------------------------------------------------------------------- இந்த கடிதம் உன் கையில் கிடைக்கும் போது நீ உயிரோடு இருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இல்லை என்றால் சில வேளைகளில் வைத்தியசாலை கட்டிலில் கூட படுத்து கொண்டிருக்கலாம்.  பைக் ஓடுவது ஒன்றும் சாகசம் கிடையாது. நீயாக ஒன்றும் செய்ய தேவையில்லை. முறுக்க முறுக்க அதுவாக ஓடும். முன்னே வருவது மாடா ஆடா, காரா பைக்கா, ஆளடிச்சானா, இல்லை மனிதனா என்பது கூட உன் பைக்குக்கு தெரியாது. சில வேளை இஸ்ராயிலாகவோ, எமனாகவோ கூட இருக்கலாம். யாருக்கு தெரியும். அது போல தன் மேல் ஏறி இருப்பதும் எருமையா இல்லை கட்டிளம் பையனா என்பது கூட அதற்கு தெரியாது. பைக் டிசைன் அப்படி.  நீ வேகமாக ஓட்டுவதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை என்பதை புரிந்து கொள்ள இன்னும் சில வருடங்கள் உனக்கு எடுக்கலாம். ஆனால், அதற்கு முதலே, சில வேளை ஒரு ஆக்சிடன்ட் உன் உயிரை பறித்து விடலாம் அல்லது நிரந்தர நோயாளியாக  மாற்றி விடலாம். இறைவன் உன்னை காப்பானாக. சில வேளை மயிரிழையில் உயிர் தப்புதல் உனக்கு ஒரு பாடமாக  அமையலாம்.  ஆனால் ஒன்று மட்டும் உண்மை.  அது சில வே

தேனீக் கண்டால் பயப்படவேண்டம்

தேனீக்களை இந்த மாதிரி கண்டால், பயப்பட வேண்டாம், தயவுசெய்து அவைகளைக் கொல்ல வேண்டாம். தேனீக்கள் அதிகதூரம் கூட்டமாக பயணம் செய்பவை, சில நேரம் உணவு கிடைக்காத களைப்பில் சோர்ந்து இம்மாதிரியான நிலையில் ஒய்வு எடுக்கும்... ஆனால் இந்த ஒய்வு 24 மணிநேரத்தை தாண்டாது... வேறு இடங்களுக்கு பறந்து சென்று விடும்... அதனால் அவைகளை தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்கள்... நீங்கள் ஏதும் தொந்தரவு செய்யாமல் தேனீக்களாக உங்களை காயப்படுத்த மாட்டார்கள். நீங்கள் உதவ விரும்பினால், ஒரு தட்டையான தட்டில் சிறிது சர்க்கரை தண்ணீருடன் வைக்கவும். தேனீக்கள் சாப்பிட்டு, ஆற்றல் பெற்று பறந்துவிடும்.  புலம்பெயர்ந்த தேனீக்களை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும், அவைகள் நமது மனித உயிர்களின் காப்பீடு ஆகும்.  எமது நல்ல கருத்துக்கள்  Groupல் இணைந்து கொள்ள விரும்புவர்கள் இந்த லிங்க் மூலம்   இணைந்து கொள்ளலாம் இதை மற்றவர்களுக்கும் share செய்யுங்கள். .. நீங்கள் பயனடைந்து போல் உங்கள் உறவுகளும் பயனடையட்டும்

ஆல்லஹ் விண் சிறப்பு

🌹  *தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் கொடுக்கும் பதினெட்டு விதமான சிறப்புகள்* 🌹 1 *அவர் நோய் வாய்ப்பட்டு இருந்தால் அந்த நோயில் இருந்து நிவாரணம் கொடுக்கப்படும்* ஆதாரம்:- நூல்: மராஸீலு அபீ தாவூது: ஹதீஸ் எண்: 105 2 *அவர் செய்த சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்* ஆதாரம்:-அல் பகரா: வசனம்: 271 3 *கஷ்டங்கள், முஸீபத்துகள் இருந்தால் அவை நீங்கிவிடும்* ஆதாரம்:- நூல்: சுனனு திர்மிதீ: ஹதீஸ் எண்: 2863 4 *அவருடைய செல்வத்தை ஷைத்தானுடைய சூழ்ச்சியிலிருந்து அல்லாஹ் பாதுகாத்துவிட்டான் எனவே தான் தர்மம் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது* ஆதாரம்:- நூல்: முஸ்னத் அஹ்மது: ஹதீஸ் எண்: 22962 5 *அவருக்காக ஒரு மலக்கு 'துஆ' செய்கிறார்.* ஆதாரம்:- நூல்:புகாரி: ஹதீஸ் எண்: 1442 6 *கெட்ட மரணத்தை விட்டும் அவர் பாதுகாக்கப்படுவார்.* ஆதாரம்:- நூல்: சுனனு திர்மிதி: ஹதீஸ் எண்: 664 7 *கப்ருடைய உஷ்னம் (அதாவது: வேதனை) முற்றிலும் நீக்கப்படும்.* ஆதாரம்:- நூல்: அல் முஃஜமுல் கபீர்: ஹதீஸ் எண்: 787 8 *அவருடைய ஏதேனும் ஒரு பாவம் அல்லாஹ்வை கோபம் அடைய செய்து இருந்தால் அவரின் தர்மம் அந்த கோபத்தை அறவே தனித்துவிடும்.* ஆதாரம்:- நூல்: சுனனு திர்மிதீ:

யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள்

*யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், யாரெல்லாம் நம்மிடமிருந்து விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை.!* *அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் இதை முடிவு செய்கிறது.* *வாய் தவறி விழும் பேச்சுக்கள் கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.* *யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுவது நல்லது.* *நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.!* *வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.* *மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள்...*   *தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.* *பணம் இருந்தால் அவனை உயர்ந்தவனாக கருதும் இவ்வுலகம்   குணம் இருந்தாலும் பணமில்லை என்ற காரணத்தால் அவனை குப்பையாகவே அடையாளம் காண்கிறது.*      *நடிப்பவனை நல்லவனாகவும்   உண்மை பேசுபவனை பைத்தியக் காரனாகவும்   அன்பு காட்டுபவனை ஏமாளியாகவும் சித்தரிக்கும் இவ்வுலகம் இப்பேருண்மையை   எடுத்துச் சொல்பவனை மட்டும் கோமாளியாகவும் பார்க்க தவறுவதில்லை..!* *இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி 

அப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று

அப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று....!! குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு...  குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை. - சிக்மண்ட்  ஃபிராய்ட் (மனவியலாளர்) சிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிசியலில் மட்டும்தான் இடம். குழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று, அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம். எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார் மனநல மருத்துவர் மீனாட்சி. அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது. அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள். சமூகத்துடனான பழக்கமும் அய்க்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது. படிப்பில் முழுத் திறனையும் வெளிப் படுத்துவார்கள். எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் தி

மனநலம் பாதிப்பு-பெண்களே

மனநல பாதிப்பு ஆண்களை விட பெண்களையே அதிகமாக பாதிக்கிறது, இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதேயில்லை, இன்னும் சொல்லப்போனால் தனக்கு மனநல பாதிப்பு உருவாகிறது என்பதை பல பெண்களே அறிவதில்லை. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு (Menstrual imbalance) பெரும்பாலும் மனநலப் பிரச்சனைகளே முக்கியக் காரணமாக அமைகின்றது. சிறு வயதில் ஏற்படும் கசப்பான அனுபவங்கள் காரணமாக பெண்மையை  வெறுக்கும் பெண்களுக்கும், மனதளவில் பெண்மையை ஏற்றுக் கொள்ளாதப் பெண்களுக்கும் (Rejection of one's femininity) மனநலப் பிரச்சனைகளும், சீரற்ற மாதவிடாய் சுழற்சியும் (Estrogen hormone) பாதிப்பும் ஏற்படுகின்றது. இதேப்போல் பெண்களுக்கு ஏற்படும் ஒற்றைத் தலைவலி, கர்ப்பப்பை நீர்க்கட்டிகள், மார்பகப் புற்றுநோய் ஆகியவையும் நாள்பட்ட மனநல பாதிப்பின் முதிர்ச்சியால் ஏற்படும் மிக முக்கியப் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. நாற்பதை கடக்கும் பெண்கள் கண்டிப்பாக ஒருமுறையாவது, மனநல ஆலோசகரை சந்தித்து ஒரு கவுன்சிலிங் எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகளை அலட்சியப் படுத்தாதீர்கள்.

வியாபார யுக்தி

வியாபார யுக்தி - Marketing Strategy!  ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ பஸ் நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பஸ்ஸில் பழக் கூடையுடன் ஏறினார்.  '‘ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். அவன்தான்யா நிசமான வியாபாரி, அவன்தான்யா நிசமான வியாபாரி,     எவரும் பழம் வாங்க முன்வரவில்லை.    சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான்.  '‘ஆறு பழங்கள் பத்து ரூபாய்!’' என்று கூவினான்.    அவனுக்கு நல்ல விற்பனை!   மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும்,  ‘'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’' என்று விற்க முயன்றார்.    பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார்.    அடுத்து, ‘'ஆறு பழங்கள் பத்து ரூபாய்’' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!   பிஸினெஸ் ரகசியம் !   மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.    முதியவரை அருகே அழைத்தவர், ”அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும்

நேரம் சரியானதுதான்

*உனது நேரம்* *சரியானதுதான்!*  ஒருவன்  20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால்,  10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...! இன்னொருவன்  30 வயதில் திருமணம் செய்கிறான்.  1 வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...! ஒருவன்  22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான். ஆனால்,  5 வருடங்களுக்குப்பின்பே  தொழில் கிடைக்கிறது...! இன்னொருவன்  27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது...! ஒருவர்  25 வயதில் நிறுவனத்தில் தலைமைப்பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில் அவர் மரணித்து விடுகிறார்...! இன்னொருவர்  50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார்.  90 வயது வரை வாழ்ந்து விட்டு செல்கிறார்...! நம்மால் புரிந்துகொள்ள சிரமமான இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் வல்ல இறைவன் முன்பே கணித்து வைத்தவை.  எழுதுகோல்கள் தூக்கப்பட்டு விட்டன. ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டு விட்டன...! அவனைப் போல் எனக்கில்லையே என்று நீ புலம்பும் அதே நேரத்தில்,  உன்னைப்போல் நான் இல்லையே என்று அவன் புலம்பிக்கொண்டிருப்பான். உனக்கு விதிக்கப்பட்டது வேறு.. அவனக்கு விதிக்கப்பட்டது வேறு.. ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...! உனக்கு முன்

இல்லறம் துயரம்..

கணவன்: ஓய்.. இங்க பாரு,  கொஞ்சம் திரும்பி படு.. மனைவி: அதெல்லாம் முடியாது,  எனக்கு தூக்கம் வருது... கணவன்: இப்போ நான் என்ன கேட்டேன் ?  உன்கிட்ட  கொஞ்சம் பேசணும். மனைவி: அதுக்கு இப்போ தான் நேரம் கிடைச்சாதா? பேசாம தூங்குறிங்களா இல்லையா.. கணவன்:  வேற எப்போ தான்  உன்கிட்ட  பேசுறது?  மனைவி: நான் காலையில் சீக்கிரம் எழுந்திரிக்கணும் . என்ன தூங்க விடுங்க.. கணவன்: இல்லடி கொஞ்சம் திரும்பி தான் பாரேன். மனைவி: உங்களை பற்றி எனக்கு தெரியும்,  நான் ஒன்னும் மெஷின் இல்ல, சரியா?  இப்போ தூங்குறிங்களா இல்லையா? கணவன்: என்னடி இப்படி பேசுற,  உனக்கு என்னதான் அப்படி பிரச்சனை? மனைவி: எப்படிங்க இப்படி வாய் கூசாம கேக்க முடியுது? என்னை  கலயாணம் பண்ணிக்கிட்டதிலிருந்து  அப்படி என்ன பெருசா பண்ணிட்டிங்க? எல்லோர்  மாதிரியும் தினமும்  வெளிய கூட்டிட்டு போங்கன்னு அடம் பிடிக்கிறேனா? எனக்கு அது இது வேணும்ன்னா தினமுமா கேக்குறேன்? வருஷத்துக்கு ஒரு நாள் தீபாவளி வருதுனு  தானே கேக்குறேன்.  அதைக்கூட வாங்கி தர  மாட்டிங்களா? நானும் மனுஷி தான் புரிஞ்சுக்கோங்க.. சத்தியமாக அவனிடம் இதற்கு விடை இல்லை.. கணவன்: சரி தூங்கு.. மனைவி:  நாய் ம

வாழ்வை வளமாகும்

வாழ்வை  வளமாக்கும் வழிமுறைகள்.... * அமைதி, மன்னிக்கும் பெருந்தன்மை, மன உறுதி ஆகிய நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் வாழ்வில் வளரத்தொடங்குவீர்கள். * தவறை எண்ணி வருத்தப்படாதீர்கள். நமக்கு வழிகாட்டும் தெய்வமாக அவை இருக்கிறது. எனவே தவறை பெரும் பேறாகக் கருதுங்கள். * விதையின் சக்திதான் மரமாக வளர்கிறது. அதுபோல ஒவ்வொருவரின் வாழ்வும் அவரவர் கொண்டிக்கும் மன ஆற்றலை பொறுத்தே அமைகிறது. * அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை கொண்டு வந்தே தீரும். * மன ஒருமையுடன் பணியாற்றுங்கள். ஆர்வத்துடன் ஈடுபட்டால் பணிகளை சிறப்பாக செய்ய முடியும். * பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்தும் பிள்ளைகள் கடவுளையும் மகிழ்ச்சி அடைய செய்கிறார்கள். * அடுத்தவர் கருத்தை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டாம். அனைத்தையும் ஆராய்ந்து பாருங்கள். அதில் உங்களுக்கு திருப்தி இருந்தால் பின்பற்றலாம். இல்லையெனில் உங்களது கருத்தில் உறுதியாக இருங்கள். * எந்த வேலையையும் உங்களது விருப்பத்துக்கு ஏற்றதாக மாற்றிக்கொள்ளுங்கள். * இடைவிடாமல் பணியாற்றுங்கள். எந்த பணிக்கும் அடிமையாகி விடாதீர்கள். * வெற்றியோ, தோல்வியோ அதை விருப்பத்துடன்

60 வயதின் வாழ்க்கை

_*60 வயதைக் கடந்து 70ஐ நோக்கி வாழ்க்கையை நகர்த்தும் பழக்கமான தெரிந்த பெரியவர் ஒருவரிடம்,*_ _*“நீங்க எப்டி இருக்கீங்க. எப்டி பொழுது போகுது”*_ _*என்று கேட்டேன்.*_ _*அதற்கு அவர் " உங்களுடைய கேள்விக்கான பதிலை நான் வீட்டிற்குப் போய் உங்களுக்கு அனுப்புகிறேன்" என்றார்.*_ _*அவ்வாறே அவர் வாட்ஸ்அப்பில் ஒரு நீண்ட பட்டியலை அனுப்பினார். இதோ 👇*_ _*1) என் பெற்றோரிடம்,*_ _*என் உடன்பிறந்தோரிம்,*_ _*என் மனைவியிடம்,*_ _*என் குழந்தைகளிடம்,*_ _*என் நண்பர்களிடம்*_ _*அன்பும், பாசமும்,*_ _*காதலும்*_ _*கொண்டிருந்த நான், இப்போது*_ _*என்னை நானே விரும்பத் தொடங்கியுள்ளேன்.*_ _*2) இந்த உலகத்தை நான் என் தோள்களில் தாங்கிப் பிடித்திருக்க வில்லை என்பதை உணர்கிறேன்.*_ _*3) இப்போதெல்லாம் காய்கறிக்காரரிடம், பூக்காரியிடம், தள்ளுவண்டிப் பழ வியாபாரியிடம் பேரம் பேசுவதை நிறுத்தியுள்ளேன்.*_ _*பேரம் பேசாமல் நான் தரும் உபரித் தொகை அவருடைய குடும்பத்திற்கு ஏதாவது ஒருவகையில் உதவும் என்று கருதுகிறேன்.*_ _*4) நாள் முழுதும் உழைக்கும் டாக்சி*_ _*டிரைவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு*_  _*மீதிச் சில்லறைக்*_ _*காசுக்காகக்*_ _*காத்த

40 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்

*40 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்..................* *சொந்த காலில் நில்!*   அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும்.   நால்வருக்கு உதவ வேண்டும் என்பதில்லை,   யாருடைய உதவியும் இன்றி வாழ்வது என்பதே ஓர் பெரிய கெளரவம் தான்.      *உலகம் சுற்றும் வாலிபன்!*   குறைந்தபட்சம் சிங்கபூர்,மக்கா, மலேசியா-வாவது சென்று வந்துவிட வேண்டும்.   புது இடம், புதிய கலாச்சாரம் உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள, புத்துணர்ச்சி அடைய பெருமளவு உதவும்.      *பேரார்வம்!*   பேரார்வம் என்பது உங்கள் வேலையை குறிப்பது.   ஆரம்பத்தில், வேலை வேண்டும் என்பதற்காக ஏதாவது வேலையில் சேர்ந்திருக்கலாம்.   ஆனால், 30 வயதுக்குள்ளாவது உங்களுக்கு பிடித்த துறை / தொழில் / வேலையில் சேர்ந்துவிட வேண்டும்.      *தோல்வி!*   தோல்வியில் கற்காத பாடத்தை நீங்கள், வேறு எங்கும் கற்க முடியாது. தோல்வி உங்களை ஒழுங்குப்படுத்தும் ஆசான்.   ஓர் தோல்வியையாவது நீங்கள் சந்தித்துவிட வேண்டும். இல்லையேல், 30 வயதை கடந்த வாழ்க்கையில் ஏற்படும் சி

பழையசோறு உணவு

உலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடம் :      அமெரிக்க விஞ்ஞானி ஆய்வின் முடிவு ”பிரியாணி கூட இரண்டு மணி நேரத்துல கிடைக்கும், ஆனா பழைய சோறு வேணும்னா ஒரு நாள் காத்து இருக்கணும்னு” சொல்லுவாங்க நம்ம வீட்டு பெரியவங்க! ஆமாங்க அது உண்மை தான். நம்ம கிராமப் புறங்களில் பார்த்து இருப்போம், காடு, மேடு-னு போயி உழைக்கிறவங்க, காலையில வீட்டில இருக்குற பழைய சோறு, வெங்காயம் கடிச்சு சாப்பிட்டு போவாங்க.  மாடு போல உழைக்குறவங்களுக்கு  இந்த பழையசோற்றின் அருமை தெரியும். நம்ம ஊருல  பழைய சோற்றுத் தண்ணீரை, நீராகாரம்-னு சொல்லுவோம். பழைய சாதம் செய்வது எப்படி: முதல் நாள்  சாதத்தில் நீரூற்றி, மறுநாள்  காலையில் பார்த்தா.  பழையச் சோறு ரெடி. நீரூற்றிய 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி என்ன இருக்கு பழைய சோறுல நினைக்கிறிங்களா, வடித்த சாதத்தில் 3.4 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது  என வைத்துக்கொள்வோம். அதுவே, பழைய சாதமாகும்போது, இரும்புச்சத்தின் அளவு 73.91 மி.கிராமாக இருக்கும். பழைய சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும்,  உடல்பருமன் உண்டாக

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன? புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள். புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள். புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி கோழையுடன் வாழுவாள். புத்தியுள்ள பெண் அவனுக்கு சுதந்திரம் அழித்து, தன்னிடம் இருக்கும் தைரியத்தையும் மகிழ்ச்சியையும் அவனுடன் பங்கிட்டு தைரியசாலி கணவனுடன் தைரியமாக வாழுவாள். புத்தியில்லாதவள் என் வீட்டில் நான் அப்படி வாழ்ந்தேன் இப்படி வாழ்ந்தேன் என்று முடிந்து போனதை கணக்கிட்டு கையில் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுத்து வாழ்கிறாள். புத்தியுள்ள பெண் எதைக் கையில் கொடுத்தாலும் அதை அழகாக்க முயற்சிக்கிறாள். இடிந்து போன வீட்டை இவள் கட்டுகிறாள். நன்றாக இருக்கும் வீட்டையும் அவள் சிதைத்துவிடுகிறாள். புத்தியுள்ள பெண் வருமானத்திற்குள் செலவு செய்து மீதம் எடுக்கிறாள். புத்தியில்லாதவள் ஆடம்பரத்திற்கு வாழ்க்கையை அடகு வைத்து கண்ணீர் சிந்துவாள். புத்தியுள்ள பெண் நிதானமாகவே செயல்படுவாள். கண்ணாடி குவளையை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

 *தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)*  *சுதந்திரத்திற்கு முன்*  1. சுப்பாராய ரெட்டி (1920 -21) 2. பனகல் ராஜா (1921 - 26) (இராமராய லிங்கர்)  3. டாக்டர் பி. சுப்பாராயன் (1924 - 30) (சுயேட்சை) 4. முனிசாமி நாயுடு (1930 - 32) 5. பொப்பிலி ராஜா (1932 - 37) (இராமகிருஷ்ண ரங்கா ராவ்) 6. பி.டி ராஜன் (1936) இடைக்கால முதல்வர் 7. வெங்கட ரெட்டி நாயுடு (1937) இடைக்கால முதல்வர் 8. இராஜாஜி (1937 - 39) காங்கிரஸ் அமைச்சரவை.‌ (1935 இந்திய கவுன்சில் சட்டம்)  9. கவர்னர் ஆட்சி (நவ 1939 - ஏப்ரல் 1946)  10. டி. பிரகாசம் (ஏப்ரல் 1946 - மார்ச் 1947) 11. ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் (மார்ச் 1947 - ஏப்ரல் 1949)  12. பி.எஸ். குமாரசாமி ராஜா (ஏப்ரல் 1949 - ஜனவரி 1952)  *சுதந்திரத்திற்கு பின்*  1. இராஜாஜி (ஏப்ரல் 1952 - ஏப்ரல் 1954) (இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி 1952ல் நடைபெற்ற தேர்தல் மூலம் முதல்வர் தேர்வு) 2. காமராசர் (ஏப்ரல் 1954 - அக்டோபர் 1963)  3. எம். பக்தவத்சலம் (அக்டோபர் 1963 - 1967) 4. சி.என் அண்ணாத்துரை (1967 1969) திமுக  5. மு‌ கருணாநிதி (10 பிப்ரவரி 1969 - 71)  6. மு. கருணாநிதி (1971 - 76) 

இது அப்பாவை நேசிப்பவர்களுக்கானது கண்ணீர் இல்லாமல் வாசிக்கவும்.

இது அப்பாவை நேசிப்பவர்களுக்கானது கண்ணீர் இல்லாமல் வாசிக்கவும். ஆணழகன் அப்பாவிற்கு_அழத்தெரியாது!! ⚽ குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்! ⚽ பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்! என்னடா வாழ்க்கை இது என ஒருநாளும்_அழுதிருக்கமாட்டார்!  ⚽ மனைவியை நெஞ்சில் சுமந்து! ⚽ பிள்ளைகளை தோளில் சுமந்து! ⚽ குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து! போகும் வழி தெரியாமல் விழிபிதுங்கி நின்ற போதும்! தான் கலங்கினால் குடும்பம் உடைந்துவிடும் என கல்லாய் நின்றவர்!  நாம்_அவரை_கல்லெனவே நினைத்துவிட்டோம்! ⚽ அம்மாவிடம் ஒட்டிக்கொள்வோம்! ⚽ அப்பாவிடம் எட்டி நிற்போம்! ⚽ முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள் சொற்பம் என்போம்! ஆனால், தோல்வியில் துவளும் போது பிடித்துகொள்ள அப்பாவின் கைகளை தான் முதலில் தேடுவோம்! நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும்!  தள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில் ததும்பும்_ஜீவன்_அது! ⚽ நாம் திண்ணும் சோறும்! ⚽ உடுத்தும் உடையும்! ⚽ படித்த படிப்பும்! அப்பாவின் வேர்வையில்தான் என ஒருநாளும் அவர் சொல்லிக்காட்டிதில்லை! நேரில் நம்மிடம் நாலு வார்த்தை கூட பேசாதவர்! ஊர்முழுக்க நம்மை பற்றிதான் பெருமையாக பேசி திரிவா

நேர்மை கூட ஒரு போதைதான்

நேர்மை கூட ஒரு போதைதான் ...📚📚✍️✍️ ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் ஒன்று வாங்கி வர சந்தைக்குப் போனான். ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கிக் கொண்டு ஓட்டி வந்தான். ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நியாயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று.  வீட்டுக்கு வந்ததும் தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான். அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான். அவனால் முடியவில்லை. தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்க சொன்னான்.. ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், பொத் என ஏதோ கீழே விழுவதை கண்டு எடுத்துப் பார்த்தான். அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தது. விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள். தகதகவென மின்னியது. அதை எடுத்து கொண்டு முதலாளியிடம் ஓடி வந்து அதைக் காண்பித்தான். உடனே வியாபாரி, "அந்த பையை இப்படி கொடு, உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் கொடுக்கணும்"னு சொல்லி புறப்பட்டான். பணியாளோ, "ஐயா இது யாருக்கும் தெரியப் போவதில்

குறைகள் இல்லாத மனிதர்கள் இல்லை

ஒரு துறவியிடம்  அழகான பெண் ஒருத்தி கேட்டாள் ... "என் கணவர்கிட்ட நிறைய குறைகள்... அவரோடு என்னால் இனி  வாழமுடியாது!!! எனவே அவரைவிட்டு நான்  விலகி விடட்டுமா?"  அவளுக்கு நேரடியாக பதில் சொல்லாத துறவி...  "அம்மணி! இங்குள்ள செடிகளில் ஏதாவது ஒன்றை உனக்கு தர விரும்புகிறேன்.. எது வேண்டும் கேள்?" என்றார். அப்பெண் ரோஜா செடியைக் கேட்டாள்... "அதைப் பராமரிப்பது மிகவும் கடினம்... அதோடு அதில் நிறைய முட்கள் வேறு இருக்கிறதே, இதுவா வேண்டும்?"  என்று கேட்டார் துறவி. "எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும்... அதனால் அதனிடம் உள்ள முட்கள் எனக்கு பெரிதாகத் தெரியவில்லை என்றாள்..." புன்னகைத்த துறவி சொன்னார்: "வாழ்க்கையும் அப்படித்தான்! பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால், அவர்களது குறை பெரிதாகத் தெரியாது". குறைகளை பெரிதுபடுத்தாமல் நம்மை சுற்றி இருப்பவர்களை நேசிப்போம்... நாமும் குறைகள் நிறைந்தவர்கள்தான்...! குறைகளே இல்லாத மனிதன் என்று எவரும் இல்லை .என்று அந்த பெண்னுக்கு புரியவைத்தார். குறிப்பு:- கதையின் நீதி  இது #ஆண், #பெண் இருவருக்கும் பொருந்தும்.

பணத்தை எப்படி செலவு செய்கிறோம்

#பணத்தை எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதைவிட எப்படி செலவளிக்கிறோம் என்பதில் கவனம் கொள்ளுங்கள்.   ஒரு கல்லூரி மாணவி ஒருவர் தன் #நண்பர்களுக்கு_ட்ரீட் கொடுக்க அப்பாவிடம் பணம் கேட்டார்.   அப்பா, எவ்வளவு வேண்டும்?   என்று கேட்டார். ஐந்து பேர் போகிறோம்.   4 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்றார் மகள். வெளியே சென்று செலவழிப்பதற்கு இவ்வளவு பணம் தேவையா?   என்று வியந்த அப்பா,   என்னிடம் இப்போது இல்லை.   ஒரு வாரம் பொறுத்துக்கொள். தருகிறேன் என்று சொன்னார். மகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.   எனக்கு இப்போதே பணம் வேண்டும் என்று கேட்டார். அவ்வளவு தொகையை ஒருநாள் மதிய விருந்துக்கு செலவழிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. உன் படிப்புக்கு எவ்வளவு செலவாகிறது என்று உனக்கே தெரியும். நம் குடும்ப நிலைமையை மீறித்தான் உன் படிப்பு செலவை கவனித்துக் கொண்டிருக்கிறோம். அவசியமானதற்கு செலவழிக்கலாம். ஆனால், ட்ரீட் என்ற பெயரில் அனாவசிய செலவு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் நீ இந்தக் காலத்துப் பெண். உன் விருப்பத்தையும் மறுக்க என்னால் முடியாது.   ஆகையால் குறைந்தது மூன்று நாட்களாவது பொறுத்துக் கொள் என்று அப்பா சொன்னார். மகள் அதை ஏற்காமல

வெள்ளரிக்காய நன்மைகள்

வெயில் காலத்தில் வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! இயற்கை நம்மை காலத்திற்கேற்ற பாதுகாப்புகளை கொடுத்து நம்மை காக்கிறது. அதை நாம் முழுமையாய் உணராமல் விடுவதால்தான் பாதிப்புகளுக்கு ஆளாகின்றோம். உதாரணமாக கோடையில் அதிகம் கிடைப்பதுதான் வெள்ளரிக்காய். குவிந்து கிடக்கும் இதன் அருமையினை பற்றி நன்கு அறிந்தால் இதன் பலன்களை முழுமையாய் பெறுவோம். * கோடை என்றாலே உடலில் நீர் சத்து எளிதில் குறையும். இதனால் உடலின் கழிவுப்பொருள் வெளியேற்றத்தில் பிரச்சினை ஏற்படலாம் வெள்ளரியில் நார்சத்தும், நீர் சத்தும் அதிகம் என்பதால் இந்த பிரச்சினை இருக்காது. * வெள்ளரி சிறுநீரக பாதை பிரச்சினைகளை தீர்க்க உதவும். வெள்ளரி சாறு இருவேளை குடித்தால் போதும். உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தினை சுத்தம் செய்து விடும். சிறுநீரகத்தின் அழுத்தத்தினை குறைத்து சிறுநீரகங்களை ஆரோக்கியமாய் வைக்கும். * வெள்ளரிக்காய்க்கு நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் இவைகளை நீக்கும் ஆற்றல் உள்ளது. தினமும் இதன் சாறு எடுத்துக் கொள்ள இப்பிரச்சினைகள் தீரும் ஜீரண சக்தி கூடும். * வெள்ளரி குடலிலுள்ள நாடா பூச்சிகளை நீக்கும். இதிலுள்ள எகிப்ஸின் என்ற

ஆசிரியர் கண்டிக்காத மாணவனை நாளை காவல்துறையும் நீதிமன்றமும் தண்டிக்கும்

ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது சிகரெட் பிடிக்கப் பழகினான். பதினொன்றாம் வகுப்பிலேயே தண்ணி அடிக்கப் பழகினான். தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான்.அங்கு சீட்டாடவும் பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான். அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால் பொய் சொல்லவும், திருடவும் ஆரம்பித்தான். இறுதியில் கொலைகாரனாகவும் ஆனான். கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கீழ்க்கோர்ட், மேல்கோர்ட் என வழக்கு நடந்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.அனைத்து அப்பீல்களும் நிராகரிக்கப்பட்டு தூக்கிற்கான நாளும் குறிக்கப்பட்டது..தூக்கிற்கு முன்தினம் கடைசி ஆசை கேட்கப்பட்டது.பெற்றோரைச் சந்திக்க விரும்பினான்.பெற்றோரும் வந்தனர்.கதறினர்.போலீஸ், வக்கீல், நீதிபதி, சாட்சிகள் எல்லோரும் சதி செய்து அவனைத் தூக்குக்கு அனுப்பி விட்டதாக அழுது புலம்பினர், மகன் அமைதியாகச் சொன்னான். "அவர்கள் காரணமில்லை, நீங்கள்தான் " நான் ஐந்தாம் வகுப்பில் தவறு செய்தபோது ஆசிரியர் என்னை கண்டித்து அடித்தார்.வீட்டில் அதை நான் சொன்னதும் நீங்கள் உறவினர்கள், நண்பர்களை கூட்டிக் கொண்டு பள்ளிக்கு வந்து ஆசிரியரையும், தடுத்த மற்ற ஆசிரியர்களையும் அடித்து மிரட

கணவன் எழுதிய கவிதை

*அழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது* நான் காலையில் படுக்கையிலிருந்து எழும்புகிறேன் நீ நெருப்புப் புகையோடு போராடிக் கொண்டிருக்கிறாய்.  நான் பல் துலக்குகிறேன் நீ பாத்திரங்களை புதுப்பிக்கிறாய்.  நான் செய்தித்தாளில் செய்திகளை சேகரிக்கிறேன்.  நீ வீட்டில் குப்பைகளை பெருக்குகிறாய்.  நான் உடலை சுத்தம் செய்கிறேன்.  நீ ஆடைகளின் அழுக்குகளை பிரித்துக் கொண்டிருக்கிறாய்.  நான் பசியாற வயிற்றை நிரப்புகிறேன்.  நீ பாத்திரங்களை நீரால் நிரப்புகிறாய்.  நான் அலுவலகம் கிளம்புகிறேன்.  நீ பிள்ளைகளை சீருடையில் அனுப்பி விட்டு என்முறைக்காக காத்திருக்கிறாய்.  நான் இரவு வீடு திரும்புகிறேன்.  நீ இன்னும் திரும்பவில்லை சமையலறையிலிருந்து.  நான் தூங்கச்செல்கிறேன்.  நீ கதவின் தாழ்ப்பாள்களையும் எரியும் மின்விளக்குகளையும் பிள்ளைகளின் போர்வைகளையும் சரிபார்த்து விட்டே படுக்கையில் விழுகிறாய்.  ஒவ்வொரு ஞாயிறுகளும் ஒவ்வொரு பண்டிகைகளும் எங்களுக்கு ஓய்வு நாட்கள் உனக்கு? உறவு வீட்டு விழாக்களில் எங்களிடத்தில் நீ! கல்விக்கூடங்களின் கேள்விகளுக்கான பதில் நீ! சோக நிகழ்வுகளிலும் கண்ணீர் சிந்திய படி நீ! எங்களின் பிரதிநிதியாக  கோவில்கள

கணவன் மனைவிக்கு மனைவி கணவனுக்காக வாழ வேண்டும்.

1.மனைவி பொருப்புதாரியாக இருக்க வேண்டும் -கணவன் திருப்தியுடன் மௌத்தானால் சொர்க்கம் கிடைக்கும். கணவனுக்கு அதிக சுமை ஏற்படுத்த கூடாது -வருமானத்திற்கேற்ப, சக்திகேற்ப வாழ்க்கை நடத்த வேண்டும். 2.ஆசைகள் , அனாவசிய தேவைகள் குறைத்தல். 3.தேவைகளை தொடர்ந்து கேட்டுகொண்டே இருத்தல் கூடாது.  4.கனவன் மனதில் மனைவியை பற்றிய மாற்றத்தை கெடுக்க கூடாது- நடத்தை, பேச்சு, ஆடை, அனைத்திலும் கணவன் மனைவியை பார்க்கும்போது சந்தோசத்தையும்,நட்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.கணவனிடம் மட்டும் தனது அழங்காரம் காட்ட வேண்டும்.  5.கணவனிடம் எல்லாமே இருக்கனும் நினைக்காதீங்க,குரைத்துக்கொள்(comparison,expectations). 6.கணவன் இருக்கும்போது வேலைகளை குறைக்க வேண்டும். 7. வீட்டை அழகாகவும்,சுத்தமாகவும் வைத்தல்,கணவன் அறையை சுத்தமாக வைக்க வேண்டும்.தீனில் சுத்தம் மிக முக்கிமான சுன்னத் 8.மனைவியிடம் இருக்கும் திறமை,நல்ல தன்மை, கணவனிடம் வெளிப்படுத்தி தெரிவிக்க வேண்டும். 9.கணவனிடம் இன்பம் துன்பம் அனைத்தையும் பகிர்ந்துக்க வேண்டும். 10.கணவனின் சூழ்நிலைகேற்ப தனது பிரச்சனைகளை பகிர்தல், 11.மனைவியான பின் உன்னுடைய நேரத்தை நன்பர்களிடம் செலவழிப்பது, மொபைலில்

கருவேப்பிலை பயன்கள்

*கறிவேப்பிலை இருக்க, கவலை எதற்கு?* காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். ரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும். கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து பாதுகாப்பு தரும். நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும். கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள். சளித் தேக்கத்தில் இரு

மகளைபொள் மருமகள்

எனக்கு 77 வயது..! மனைவியை இழந்து பத்து வருடங்களாகிறது...அன்பின் நீரூற்ற மறந்த எத்தனையோ முதியவர்களில் நானும் ஒருவன்..! இருக்கின்ற நான்கு மகன்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு மகனிடம்..! இப்போது இருப்பது மூன்றாவது மகனிடம்..! இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது கடைசி மகனிடம் செல்ல..! இப்போதிருந்தே வயதான விரல்களை கொண்டு எண்ணிக்கொண்டு இருக்கிறேன்.. கடைசி மருமகளிடம் செல்லும் நாட்களுக்காக..! போன தீபாவளிக்கு இரண்டாவது மருமகள் வாங்கித்தந்த வெள்ளை வேட்டி பழுப்பு நிறமாகி பலநாட்கள் ஆகிவிட்டது..! முதல் மகன் வாங்கித்தந்த கண்ணாடி உடைந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது.., இப்போது இருக்கும் கோபக்கார மகனிடம் கேட்டால் என்ன சொல்வானோ என்று பயந்து கண்ணாடியை ஒளித்து வைத்துவிட்டு வெறுங்கண்களோடு தடுமாறிக்கொண்டு இருக்கிறேன்..! கடைசி மருமகளிடம் சொல்லி தான் மாற்றிக்கொள்ள வேண்டும்..! இன்னும் நான்கு நாட்கள் தான் என்பதால் எல்லோரும் வேலைக்கு போனபின்பு என்னுடைய வேட்டி ஜிப்பாக்களை துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.., துணி துவைக்கும் மிஷின் இருந்தாலும் என்னுடைய துணிகளை தனியாகத்தான் போடவேண்டும் என்று சொல்லி அவர்களின் ஆடையோடு கூட ஒட்டவிட

மருத்துவரின் நல்ல குணம்

ஒரு #மருத்துவர், #நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால், வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்... விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்... அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார். மருத்துவரைக் கண்டதும் #கோபமாக, "என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்... ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்? உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?" என்று கதறினார். மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள், நான் மருத்துவமனையில் இல்லை... எனக்கு அழைப்பு வந்ததும் என்னால் இயன்ற அளவு விரைந்து வந்தேன்... சற்று #பொறுமையாக இருங்கள்" என்று கூறினார். "பொறுமையாக இருக்கவா?" அந்த தந்தை மேலும் ஆத்திரத்துடன், "உங்கள் மகன் இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா? உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்" என்று கொந்தளித்தார். மருத்துவர் சிரித்த முகத்துடன், "எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம், நீங்களும் கடவுளி

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்றால் என்ன? என்பது பலருக்கும் இன்னும் சரியாகப் புரியவில்லை... ஆண்களுக்கு தொப்பியும் தாடியும், பெண்களுக்கு புர்காவும் மாத்திரம் அல்ல முஸ்லிமின் முன்மாதிரிகள்... ▪திருடக் கூடாது. ▪பொய் சொல்லக் கூடாது. ▪லஞ்சம், ஊழல் கூடாது. ▪கடத்தல் கூடாது. ▪வட்டி கூடாது. ▪பதுக்கல் வியாபாரம் கூடாது. ▪பிற மதத்தை நிந்தனை செய்யக் கூடாது. ▪நம்பிக்கைத் துரோகம் கூடாது. ▪பிறரை ஏமாற்றக் கூடாது. ▪பிறர் குறை பேசக் கூடாது. ▪பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது. ▪பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது. ▪அனாதைகளை விரட்டக் கூடாது. ▪ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது. ▪பிறரை வம்பிழுக்கக் கூடாது. ▪எவரையும் கொல்லக் கூடாது. ▪எவரையும் தூற்றித் திரியக் கூடாது. ▪எவர் மீதும் தப்பெண்ணம் கூடாது. ▪கடும் வார்த்தைப் பிரயோகம் கூடாது. ▪எவர் மீதும் அபாண்டம் சுமத்தக் கூடாது. ▪எவரையும் துன்புறுத்தக் கூடாது. ▪பெரும் சிரிப்புக் கூடாது. ▪பெருமை கூடாது. ▪பேராசை கூடாது. ▪ஆடம்பரம் கூடாது. ▪ஆணவம், அகம்பாவம் கூடாது. ▪ஆட்டம் போடக் கூடாது. ▪எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது. ▪பிறர் விஷயத்தில் தேவையில்லாமல் நுழையக் கூடாது. ▪அனுமதியின்றி பிறர் வீ