சிறந்த சிறுகதை

 சிறந்த சிறுகதை :  வாசித்துத்தான் பாருங்களேன்!


“#உனக்கு_தகுதி_இல்லாத_இடத்தில்_நீ_இருக்காதே”


    ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் தன்மகனை அழைத்து சொன்னார் , " மகனே , இது உனது பூட்டனின் கைக்கடிகாரம் , 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது , நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில் நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப் பார் என்றார் . அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம் , இது பழையது என்பதால் 1000 ரூபா மட்டுமே தர முடியும் என்கின்றனர் , என்றான் . 


    தந்தை பழைய பொருட்கள் விற்கும் கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார் . அவன் போய் கேட்டு விட்டு , தந்தையிடம் இதற்கு 5000 ம் ரூபாதான் தர முடியும் என்கின்றனர் என்றான் . 


    தந்தை ‘இதனை நூதனசாலைக்கு ( Museum ) கொண்டு சென்று விலையை கேட்டுப்பார்’ என்றார் ... அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம் , நான் அங்கு போன போது , அவர்கள் அதனை பரிசோதனைக்குட்படுத்த ஒருவரை வரவழைத்து , பரிசோதித்துவிட்டு , என்னிடம் இதற்கான பெறுமதி நூறு மில்லியன் என்கின்றனர் என்றான் ... 


    தந்தை மகனை பார்த்து , ‘மகனே ! சரியான இடம் தான் , உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும் . எனவே , பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு , உன்னை மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்றார் .....’ உன்னுடைய மரியாதையை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான் .... 

" " உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே ... ” இதனை நீ வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள் ....என்றார்.


Comments

Popular posts from this blog

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

கஷ்டதின் கதை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு